Saturday, June 24, 2017

தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு- M K Stalin to be the Next Chief Minister

தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
M K Stalin



பண்பாடு மக்கள் தொடர்பகம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கள ஆய்வு நிலவரத்தை நடத்தினர். இதுகுறித்து பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சமூக நிலவரத்தை தீர்மானிக்கும் காரணிகளையும் அவற்றின் கூட்டு செயல்பாட்டையும் கணிக்க கடந்த ஜூன் 9 முதல் ஜூன் 22 வரை தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து 5,874 பேரிடம் கள ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தின் முதல்வராக யார் வர வேண்டும் என்று கேட்டதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு 59 சதவீதம் பேரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 13 சதவீதம் பேரும், நடிகர் ரஜினிகாந்துக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜினிகாந்த் 

ஜினிகாந்த் தேசிய கட்சியில் இணைந்தால் தமிழக அரசியலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு அவருக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என 55 சதவீதம் பேரும், வெற்றி பெறுவார் என 33 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

மறு தேர்தல் நடத்தலாமா

 தமிழகத்தில் தற்போது ஆட்சியை கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தலாமா என்ற கேள்விக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என 57.2 சதவீதம் பேரும், பொது தேர்தல் நடத்த வேண்டும் என 41.8 சதவீதம் பேரும், ஆட்சி தொடர வேண்டும் என 1 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் செயல்பாட்டு

பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு 54.5 சதவீதம் பேர் எதிர்ப்பும், 37.1 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். பூரண மதுவிலக்கு வேண்டும் என்று 39.7 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆண்கள் தரப்பில் 21 சதவீதம் பேர் மதுவிலக்கு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களின் பிடித்த முதல்வர் என்ற கேள்விக்கு காமராஜருக்கு 38.5 சதவீதம் பேரும், எம்.ஜி.ஆருக்கு 21.9 சதவீதம் பேரும், அண்ணாவுக்கு 15.1 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு 10.7 சதவீதம் பேரும், ஜெயலலிதாவிற்கு 7.4 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு 0.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, June 9, 2017

திமுகவை நோக்கி திரும்பும் அதிமுக எம்.எல்.ஏ க்கள்: பயன்படுத்தி கொள்வாரா ஸ்டாலின்? Will Mr Stalin use the support of AIDMK MLAs Support to Form Government in Tamilnadu?

திமுகவை நோக்கி திரும்பும் அதிமுக எம்.எல்.ஏ க்கள்: பயன்படுத்தி கொள்வாரா ஸ்டாலின்?


எடப்பாடி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்தாலும், ஆட்சி என்பது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை, இதுவரை யாராலும் யூகிக்க முடியவில்லை.
M K Stalin

பன்னீர் அணி தனியாக பிரிந்து சென்ற பின்னர், தற்போது, எடப்பாடி அணி, தினகரன் அணி, நடுநிலையாளர் அணி என்று அதிமுகவில் மூன்று அணிகள் இயங்கி வருகின்றன.
இதில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனாலும், எஞ்சிய நான்காண்டு பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் அதை வெளியில் காட்டி கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
M K Stalin
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கினால், மீண்டும் அடிமைகளாக மாற வேண்டிய நிலை வரும் என்று, நடுநிலையாக இருக்கும் 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்கள் நினைக்கின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், பன்னீர் முதலமைச்சராக இருந்தபோது, 30 க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ க்கள், திமுகவிற்கு வர தயாராக இருந்தனர்.
அப்போது, அவர்கள் 5 அமைச்சர்கள், மற்றும் சில வாரிய பொறுப்புக்களை மட்டுமே கோரிக்கையாக முன் வைத்தனர். ஆனால், ஸ்டாலின் அதை ஏற்கவில்லை. மேலும், அதிமுகவை உடைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக இருக்க கூடாது என்றும் அவர் நினைத்தார்.
M K Stalin

ஆனால், தற்போதுள்ள நிலையில், தினகரன்-எடப்பாடி மோதலில் எந்நேரம் வேண்டுமானாலும், ஆட்சி கவிழும் நிலை வரலாம் என்ற அச்சத்தில் அதிமுக எம்.எல்.ஏ க்கள் பலர் உழன்று வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 89 எம்.எல்.ஏ க்களை பெற்றுள்ள திமுக, இந்த நேரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நேரத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கொஞ்சம் சாதுர்யமாக காய் நகர்த்தினால், தங்கள் பக்கம் திரும்ப தயாராக இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ க்களை வளைத்து பிடித்து, எஞ்சிய நான்கு ஆண்டு காலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியும்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள முன்வருவாரா? என்பதே அரசியல் நோக்கர்கள் தற்போதைய கேள்வியாக உள்ளது.

Wednesday, June 7, 2017

M K Stalin Criticises H Raja for his anti-national speech against political opponents

தேசபக்தி' தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை ‘தேச விரோதிகள்’ என்று பேசுவதை பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் திரு. எச். ராஜா  உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

M K Stalin


கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரை தேச விரோதி என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்தார். இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஹெச். ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 

நாகரீகமான அரசியலையும், ஆரோக்கியமான விவாதங்களையும் விரும்புகிறோம் என்று கூறி வரும் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர்கள் திரு.எச்.ராஜா போன்றவர்களின் பேச்சுக்களுக்கு எப்படி ஆக்கமும் ஊக்கமும் அளித்து, அவருக்கு ரயில்வே துறையிலும் அரசு பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


M K Stalin


சமூக நீதியின் திருவுருமாக இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வாழும் தந்தை பெரியார் அவர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி பேசிய திரு. எச். ராஜா பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா அவர்களின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் கொடூரமாக மிரட்டினார். இப்போது சோனியா காந்தியை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் “நீ இந்திய விரோதி” என்று ஆவேசமாகவும், ஆணவமாகவும் கை நீட்டிப் பேசுகிறார். “நாம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம், மிரட்டும் தொனியில் பேசலாம், நம்மை யார் என்ன செய்ய முடியும்?’ என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்து திரு. எச். ராஜா விடுபட முடியாமல் தவித்து வருவதாகவும் மு.க. ஸ்டாலின் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


M K Stalin


‘தேசபக்தி’ என்பதும் ‘இந்தியன்’ என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை ‘தேச விரோதிகள்’ என்றும் ‘இந்திய விரோதிகள்’ என்றும் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் திரு. எச். ராஜா போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

திரு ஸ்டாலின் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் ஆவாரா? திரு ஸ்டாலின் ஜாதகம் என்ன சொல்கிறது? Will Mr M K Stalin become Next Chief Minister of Tamilnadu ?

திரு ஸ்டாலின் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் ஆவாரா? திரு ஸ்டாலின் ஜாதகம் என்ன சொல்கிறது? Will Mr M K Stalin become Next Chief Minister of Tamilnadu ?

திரு ஸ்டாலின் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் ஆவாரா?

திரு ஸ்டாலின்  ஜாதகம் என்ன சொல்கிறது?

M K Stalin

திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் தலை சிறந்த அரசியல் தலைவர்என்பது எல்லோரும் அறிந்த உண்மை. . 2009 to 2011 காலகட்டத்தில் அவர் தமிழ் நாட்டின் துணை முதல் அமைச்சராக இருந்தவர். 1996 to 2002 வரை சென்னை நகர மேயர் ஆக இருந்தவர். அவர் சென்னை மேயர் ஆக இருந்த பொழுது சென்னை நகர வளர்ச்சிக்காக பல தொலை நோக்கு  திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தியவர். தி மு கவின் பொருளாராகவும் இருந்து வருகிறார் . தற்சமயம் தி மு கவின் செயல் தலைவராக உள்ளார். மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பல துன்பங்களை சந்தித்தவர். தனது அரசியில் வாழ்க்கையை 14 வயதிலே தொடங்கியவர்.
M K Stalin

திரு ஸ்டாலின் சரியான பிறந்த நேரம் தெரியாததால் அவருடைய தற்சமய நடப்பு தசை மற்றும் புக்தியை கணிக்க முடிய வில்லை.

திரு ஸ்டாலின் ஜாதகம்


புதன்
சுக்கிரன்
செவ்வாய்


குரு




லக்கினம்
சூரியன்


திரு M K ஸ்டாலின் ஜாதகம்

Date of Birth -1st March 1953

ராசி சக்ரம்
கேது


ராகு

சந்திரன்






சனி

வலுவான கிரஹ நிலைகள்

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் பலமுடன் காணப்படுகிறார். ஆட்சியாளர்களை உருவாக்குபவர் சூரியனின் அருளின்றி எவரும் அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது.லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகன் கோபக்காரர்அதீத துணிச்சல் உடையவனாக இருப்பார். தங்களைப் பற்றிய உயர்வு மனப்பானமை இருக்கும்இரக்கசிந்தனைபொறுமையுணர்வும்.மிக்கவர். செல்வந்தவர்களாவும்தனித்தன்மை உடையவர்களாகவும்புகழ் பெற்றும் விளங்குவார்கள்சூரியன் லக்கினத்தில் பலமுடன் காணப்படுவதால் அவர் தனது விசுவாசிகளை சரியாக அடையாளங்காணுவார் மற்றும் பல நேரங்களில்  உறுதியான மற்றும் துணிச்சலான நடவடிக்கை எடுக்க கூடிய துணிச்சல் மிக்கவராக விளங்குவர்.

கும்ப லக்கினத்திற்கு யோககாரகரான சுக்கிரன் தன ஸ்தானத்தில் ( 2ம் வீட்டில்) உச்சம் பெற்று காணப்படுவது சிறப்பு.

M K Stalin


சச யோகம்

லக்கினாதிபதியான சனி 9ம் இடத்தில் உச்சம் பெற்று காணப்படுகிறார்.அதனால் ஸ்டாலின் ஜாதகத்தில் சச யோகம் உள்ளது. ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி(சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் சச யோகம் ஏற்படும்,ஜென்ம லக்னத்திற்கு திரிகோண கேந்திரங்களில் ஆட்சி பெறும் சனி பகவான் சூரியன்செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து அமராமல்யிருப்பதால் திரு ஸ்டாலின் அவர்களுக்கு உயர்தரமான சச யோகம் அமையப்பெற்றுள்ளது .

உயர் தர சச யோகம் உள்ளதால் தி மு க வில் பலரை பின் தள்ளி தலைமை பதவிக்கு ஸ்டாலினால் வர முடிந்தது. சச யோகம் யோகத்தினால் தலைமை பொறுப்புகளில் உயர்வதுபொது மரியாதையை,கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கும் புகழுக்கும் , வருகின்ற நிலை திரு ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.

M K Stalin


குரு சந்திர யோகம்

குரு பகவான் தனது 5ம் பார்வையாக சிம்மத்தில் யுள்ள சந்திரனை பார்ப்பது குரு சந்திர யோகத்தை ஏற்படுத்தியுள்ளது . குருவும்சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு சந்திர  யோகம் உண்டாகிறதுஇதன் மூலம் உயர்ந்த கல்விசாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்
.
கேந்திர திரிகோண ஸ்தானாதிபதி சேர்க்கை யோகம்

கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோண ஸ்தானாதிபதியும் இணைந்து இருப்பதே ராஜ யோகத்தை தரும்.  திரு ஸ்டாலின் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ஆகியவர்கள் கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார்கள். புதன் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார். இவர்கள் இணைந்து குடும்ப வாக்கு கல்வி ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து இருப்பது உயர்தரமான யோகத்தை தருகிறது. இந்த கிரஹ சேர்க்கை  திரு ஸ்டாலின் அவர்களை ஒரு நிகரில்லா தலைவரை ஆக்கும்.

M K Stalin

பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 2 ம் மற்றும் 10 ம் அதிபதியான குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவதால் மிக உயர் தரமான ராஜ யோகத்தை தருகிறது.  இந்த பரிவர்த்தனை யோகம் திரு ஸ்டாலினுக்கு பொறுமையும் நிதானத்தையும் மக்கள் செல்வாக்கும் மக்களுக்கு சேவை செய்யும் மனோபாவத்தை அளிக்கும். இந்த பரிவர்த்தனை யோகம் திரு ஸ்டாலினுக்கு அரசியல் சூழ்ச்சிகளை  அறிந்து விவேகமாய் நடந்து கொள்ளும் திறமையும் மற்றும் அரசியலில் காய்களை நகர்த்தும் திறமையும் அளிக்கும்.

உச்சம் பெற்ற சனியை பார்க்கும் குரு

குரு பகவான் உச்சம் பெற்ற சனி பகவானை  பார்ப்பது திரு ஸ்டாலினுக்கு நுண்ணறிவாற்றலியும்  சமயோசித புத்தியும் அளிக்கிறது.  இதனால் திரு ஸ்டாலின் அவர்கள் கட்சியை கட்டுகோப்பாக வைத்து கொள்ளவும் மக்களின் தேவைகளை  பூர்த்தி செய்யும் ஆற்றலையும் தருகிறது.

தர்ம கர்மாதிபதி யோகம்

9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில்இந்த யோகமாகும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 9 ம் அதிபதியான சுக்கிரனும் 10ம் அதிபதியான செவ்வாயு இல் 2ம் இடத்தில இணைந்து காணப்படுகிறார்கள். தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளவர்களுக்கு  அரசியலில் உயர்ந்த பதவிஉயர்ந்த பதவி வகிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த யோகம் திரு ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை கண்டிப்பாக ஏற்படுத்தி தரும்.

வேசி யோகம்

சூரியனுக்கு  இரண்டாம் இடத்தில் ராகு கேது மற்றும் சந்திரன் தவிர மற்ற கிரஹங்கள் இருப்பது. இந்த யோகம் அமைந்த காரணாத்தால் ,திரு ஸ்டாலின் அதிர்ஷடக்காரர் நினைத்ததை முடிக்கக்கூடியவர்.

பாச யோகம்

ராகு கேதுவை தவிர்த்து மற்ற  கிரஹங்கள் ஏதாவது 5 ராசிகளில் சஞ்சரிப்பது. ஜாதகர் நேர்மையான வழியில் செல்வம்ஈட்டுவராகவும் நீதி நெறிகளை பின்பற்றுவராகவும் இருப்பர்.

அகண்டசாம்ராஜ்யயோகம்

2ம் 5ம் அதிபதிகள் சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ வலுவாக உள்ள நிலை. சாதாரண தொண்டனாக இருந்து பெரும் தலைவராக ஆகும் தன்மை. திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 2 ம் அதிபதியான குருவும் , 5ம் அதிபதியான புதனும் லக்கினம் மற்றும் சந்திரனுக்கு வலுவான நிலையில் உள்ளனர்.
தேனு யோகம்

ஜாதகத்தில் 2ம் அதிபதியை சுபர் பார்வையிட்டாலும் சேர்க்கை பெற்றாலும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் 2 ம் அதிபதியான குருவை லக்கினாதிபதியானா சனி 7ம் பார்வையாக பார்வையிடுதல். இந்த யோகத்தால் திரு ஸ்டாலின் அவர்களுக்கு நல்ல பேச்சாற்றல்  நல்ல அறிவாற்றல் ஆகியவற்றை தந்துள்ளது.

விரின்சி யோகம்

குரு லக்கினாதிபதி மற்றும் சனி  பலமுடன் காணப்படுதல். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சனி குருவை பார்வையிடுகிறார். இந்த யோகம் ஜாதகருக்கு நிலைத்த புகழ் வலிமை பேராற்றல் ஆகியவற்றை தரும்.

பர்வத யோகம்

லக்கினாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெறின் அல்லது லக்கினத்திற்கு கேந்திரம் பெற்று காணப்பட்டாலும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில் லக்கினாதிபதியான சனி பகவான் நின்ற ராசிஅதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று காணப்படுகிறார். இந்த யோகம் ஜாதகருக்கு பெரும் புகழ், திரண்ட செல்வம் ஆகியவற்றை தரும்.

யவன யோகம்

இரண்டாம் வீட்டில் சுபர் அமையப்பெற்று 2க்கு உரிய கிரஹம் பலம் பெற்று காணப்படுவது. திரு ஸ்டாலின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் புதன் மற்றும் உச்சம் பெற்ற சுக்கிரன் அமையப்பெற்று இரண்டாம் அதிபதியான குருவை உச்சம் பெற்ற லக்கினாதிபதியான சனி பார்வையிடுவது. இந்த யோகம் ஜாதகருக்கு உயர் கல்வி நல்ல அறிவாற்றல், பெரும் புகழ் ஆகியவற்றை தரும்.

லட்சுமி யோகம்


சுக்கிரன் 2 ,11 ல் அமர்த்திருக்க வேண்டும். திரு ஸ்டாலின் ஜாதகத்தில்இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன் அமையப் பெற்றுள்ளார். ஜாதகருக்கு சுக்கிர தசை மற்றும் புக்தி நடைபெறும் பொழுது அரசியலில் பெரும் பதவிகள் வந்து சேரும்.

கணிப்பு

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் எண்ணற்ற யோகங்கள் உள்ளன. சச யோகம்,குரு சந்திர யோகம் ,பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம்,வேசி யோகம், பாச யோகம், அகண்டசாம்ராஜ்யயோகம், தேனு யோகம்,விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம்போன்ற எண்ணற்ற யோகங்கள் உள்ளன.

திரு ஸ்டாலின் ஜாதகத்தில் பிறப்பு நிலை கிரஹங்கள் அவருக்கு நாட்டை ஆளும் யோகத்தை கண்டிப்பாக கொடுக்கும் . மேலும் கோச்சாரத்தில் குரு பகவான் 2ம் இடத்தில இருப்பதும் சனி பகவான் 5ம் இடத்தில இருப்பதும் கண்டிப்பாக அவருக்கு நல்ல சாதகமான பலன்களையே கொடுக்கும்.ஆகையால் ,  திரு ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டை ஆளப்போகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.